
என் இனிய நண்பர்களே...! ஆயிரம் வணக்கங்களோடு பதிவுக்குள் அழைத்துச்செல்கிறேன் வாருங்கள்!(பாரதிராசா ஸ்டைலிலே சொந்தமாக படித்து மகிழ்ந்துக்கங்கப்பா...! :)
அதற்கு முன்பதாக இன்று நம்மோடு இணைந்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன், மலர்விழி, தேவகி அம்மா, தயாஜி வெள்ளை ரோஜா, நினைவலைகள், உலவு மற்றும் அற்புதமான சமையல் குறிப்புகள் தரும் சசிகா வலைப்பதிவின் உரிமையாளர் திருமதி. மேனகா சத்தியா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிங்கோ...! உங்கள் வரவு நல்வரவாகுக நண்பர்களே...! (நம்மை மதிச்சு, நம்ம பதிவுல இணைஞ்சவங்களுக்கு ஏதோ நம்மால முடிஞ்சதுபா...! :)
***************************************************
'பேய்' விரட்டும் நூதன திருவிழா: 2 ஆயிரம் பேருக்கு சாட்டையடி
நாமக்கல், செப். 28: நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வெள்ளாலப்பட்டி அச்சப்பன் கோயிலில் "பேய் விரட்டுதல்' எனும் நூதன திருவிழா திங்கள்கிழமை நடந்தது.
நாமக்கல் மாவட்ட எல்லை முடிவான பவித்திரத்துக்கு அருகே அமைந்துள்ளது வெள்ளாலப்பட்டி கிராமம். திருச்சி மாவட்ட எல்லைக்குள் வரும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருந்தனர்.
அவர்களில் ஒருவருக்கு ஆடு மேய்க்கச் சென்றபோது பேய் பிடித்ததாகவும், அதனை அச்சப்பன் என்ற சாமி சாட்டையால் அடித்து பேய் ஓட்டியதாகவும் புராணக் கதை கூறப்படுகிறது. அச்சப்பன் நினைவாக இங்கு கோயிலும் உள்ளது.
மேலும், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இங்கு பேய் விரட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதது, திருமண தோஷம், தொழில் நஷ்டம், குடும்ப பிரச்னை, கல்வியின்மை, வேலையின்மை, தீராத பிணி மற்றும் பேய் பிடித்திருந்த நபர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாட்டையடி பெற்றால் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் தகவல்களுக்கு இங்கே...
***************************************************
வணக்கம் நண்பர்களே, நீங்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருந்த
:( ஆத்மா 8ம் பாகம் உங்களை ஒட்டுமொத்த பீதியில் உறைய வைக்க இதோ உங்களுக்கே உங்களூக்காக...
குறிப்பு : அன்பார்ந்த நண்பர்களே, இக்கதை பல திடுக்கிடும் சம்பவங்களையும் !????, அதிர்ச்சியில் உறைய வைக்கும் அமானுக்ஷ்யங்களையும் ????! ஒருங்கே கொன்டிருப்பதால், இரவில் தனிமையில் படிக்காமல், கூட்டத்தோடு படித்து கும்மியடிக்க வேண்டும் என முன்மொழியப்படுகிறது, மீறிப்படித்து அதனால் தாங்கள் பயந்து போனீர்கள், தனியே நடக்க தயங்குகிறீர்கள், என வரும் புகார்களும், மேற்கொன்டு பயத்தில் காய்ச்சலோ, அதிர்ச்சியோ ஏற்பட்டு குணப்படுத்த ஆகும் வேப்பிலை செலவு, போமோ செலவு போன்றவற்றிற்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் ஸ்டிரிக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம் :-))
முன்கதைச்சுருக்கம் : சிவாவின் துர் ஆத்மாவால் பீடிக்கப்பட்ட சுசியின் இரண்டாவது மகள் மணிமொழியின் உடலில் பல் கொன்டு கடித்தது போன்ற பல காயங்களைக்கண்டு மனம் மிக நோகிறார் சுசி, மேற்கொன்டு அந்த வீட்டில் தனியே தனது பச்சிளம் குழந்தைகளுடன் தங்குவது உசிதமாகப் படவில்லை அவருக்கு, இதுவரை மனதில் கரையானாய் அரித்துக் கொன்டிருந்த பயமனைத்தும் ராட்சச வடிவெடுத்து தமை தாககுவதாய் உயிருக்குள் வலித்து அவருக்கு...! இனிமேலும் தன் பயத்துக்கு தான் அணைகட்டி வைத்த தைரியமும் தகர்ந்துவிட அருவியாய் விழிகள் நீரைச் சொரிகின்றன..., அக்கணமே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து முடிக்கு முன் சொல்லிவைத்தாற்போல் மாலை மறைந்து இருள் கவிய, குளிர் காற்று, முதுகெழும்பில் ஊசியாய் தைக்க இங்கொன்றும் அங்கொன்றுமாய் மழைத்துளிகள்...
சுசி கலங்கினாலும், வழக்கமான தனது தைரியத்தை பகீரதப் பிரயத்தனத்துடன் வரவழைக்கப் பார்க்கிறார், மழையில் பச்சிளம் குழந்தைகளை அதிலும் வாடிப்போயிருக்கும் இரண்டாவது குழந்தை, இவர்களை இந்த மழையில் திக்கற்று திசையற்று, துணையும் இன்றி எங்கே, எப்படி கொன்டு செல்ல முடியும் தனித்திருக்கும் அவரால் ? வருவது வரட்டும், கணவர் வரும் வரை அவரால் அந்த வீட்டை வீட்டு வெளியேற முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.
கவலையோடு அமைதியான சுசிக்கு அந்த வீட்டில் எங்கு நோக்கினாலும் உருவமில்லா ஏதோ ஒன்று தமை உற்று நோக்குவதாய் ஒரு உணர்வு, தனக்குப் பின்னால் தொடும் தூரத்தில் பின்தொடரும் ஏதோ ஒன்று, என பயம் விஸ்வரூபமெடுத்து விழுங்கத் துவங்கியது....
சிறிது நிதானித்து பின் ஏதோ நினைவால் உந்தப்பட்டது போல், சுவாமி மேடைக்கு கீழே மணிமொழியைக்கிடத்தி, திருநீரை அவள் நெற்றியிலிட்டு, உடலிலும் மெல்லத்தடவுகிறார். அயர்ந்து உறங்கும் குழந்தைக்கு அருகிலேயே மற்றக்குழந்தைகளையும் கிடத்திவிட்டு அவரும் சுவரோடு சுவராக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார், அவர் கையில் முன் அட்டை கிழிந்த ஒரு பழைய கந்த சக்ஷ்டி கவசம்... மெல்ல வாய் முனுமுனுக்க மெல்லிய அவர் குரல் கந்த சக்ஷ்டி வரிகளினூடே அங்கே நிலவிய ருத்ர பூமியின் மயான அமைதியை கிழித்துக்கொன்டு காற்றோடு நர்த்த்னமிட்டபடி வியாபிக்கின்றது...
வெளியே, கருமேகங்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க, பொழுது இருண்டு, அந்தி மழை ஒரு பெருமழைக்கு அச்சாரமாய் மழைத்தூரல்களால் பூமியை நனைத்து சட சட சத்தத்தோடு மண் வாசனையை மேலெழுப்புகிறது...!
தூரத்தில் சன்னமாய் தன் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது சுசிக்கு...! காற்றில் கலந்து ஓலமிட்ட அந்த குரல் சில நேரம் ஒலித்து தானே ஓய்கிறது மெதுவாய்...
சுசியோ, அந்த சுவாமிமேடையை விட்டு இம்மியும் அசையாமல், "காஸ் லைட் " என்று மின்சார விளக்குகள் அற்ற அந்தக் காலத்தில் ஒருவித விளக்குகளை உபபோகிப்பார்களே, அந்த விளக்கை ஏற்றி வைத்து கந்தர் சக்ஷ்டி கவசத்தை மனதுள் முனுமுனுத்தவாரே, வீடு திரும்பும் கணவனுக்காக விசனத்தோடு காத்துகொன்டிருக்கிறார்...!
சுசி அறியாத ஒரு உண்மை சில வருடங்களுக்கு முன் லாரியால் தலை நசுங்கி துர்மரணம் எய்திய சிவாவின் நினைவு நாள் அன்றுதான்...! விக்ஷம் தலைக்கேறியதைப்போல விக்ஷமம் புரியும் சிவா, துன்பத்தில் துடிக்கும் சுசியைப்பார்த்து வக்ரமாக மகிழ்கிறான், தன் தாயையே துன்புறுத்துவதாய் ஒரு சந்தோக்ஷம் அவனுள் பிரவாகமெடுக்கிறது..., மணிமொழியையும் மற்றக் குழந்தைகளையும் ஒரேயடியாய் மரணத்தை பரிசளித்து தன்னோடு இணைத்துக்கொள்ள துடிக்கிறது அவன் பேராசை, ஆனால் மணிமொழியைப் போல் மற்றக்குழந்தைகள் தன் பிடிக்குள் சிக்க விடாது காக்கும் சுசியின் மேல் மேலும் மேலும் கோபம் கனன்றது அவனுள்...!
சுசியையும், அவர் குழந்தைகளையும் வாட்டிய சிவா, தனது அடுத்த பலியாக வேலை முடிந்து வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கணவரிடம் தனது கைவரிசையைக் காட்ட ஆயத்தமாகின்றான்....!
நாமக்கல் மாவட்ட எல்லை முடிவான பவித்திரத்துக்கு அருகே அமைந்துள்ளது வெள்ளாலப்பட்டி கிராமம். திருச்சி மாவட்ட எல்லைக்குள் வரும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருந்தனர்.
அவர்களில் ஒருவருக்கு ஆடு மேய்க்கச் சென்றபோது பேய் பிடித்ததாகவும், அதனை அச்சப்பன் என்ற சாமி சாட்டையால் அடித்து பேய் ஓட்டியதாகவும் புராணக் கதை கூறப்படுகிறது. அச்சப்பன் நினைவாக இங்கு கோயிலும் உள்ளது.
மேலும், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இங்கு பேய் விரட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதது, திருமண தோஷம், தொழில் நஷ்டம், குடும்ப பிரச்னை, கல்வியின்மை, வேலையின்மை, தீராத பிணி மற்றும் பேய் பிடித்திருந்த நபர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாட்டையடி பெற்றால் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் தகவல்களுக்கு இங்கே...
***************************************************
வணக்கம் நண்பர்களே, நீங்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருந்த
:( ஆத்மா 8ம் பாகம் உங்களை ஒட்டுமொத்த பீதியில் உறைய வைக்க இதோ உங்களுக்கே உங்களூக்காக...
குறிப்பு : அன்பார்ந்த நண்பர்களே, இக்கதை பல திடுக்கிடும் சம்பவங்களையும் !????, அதிர்ச்சியில் உறைய வைக்கும் அமானுக்ஷ்யங்களையும் ????! ஒருங்கே கொன்டிருப்பதால், இரவில் தனிமையில் படிக்காமல், கூட்டத்தோடு படித்து கும்மியடிக்க வேண்டும் என முன்மொழியப்படுகிறது, மீறிப்படித்து அதனால் தாங்கள் பயந்து போனீர்கள், தனியே நடக்க தயங்குகிறீர்கள், என வரும் புகார்களும், மேற்கொன்டு பயத்தில் காய்ச்சலோ, அதிர்ச்சியோ ஏற்பட்டு குணப்படுத்த ஆகும் வேப்பிலை செலவு, போமோ செலவு போன்றவற்றிற்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் ஸ்டிரிக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம் :-))முன்கதைச்சுருக்கம் : சிவாவின் துர் ஆத்மாவால் பீடிக்கப்பட்ட சுசியின் இரண்டாவது மகள் மணிமொழியின் உடலில் பல் கொன்டு கடித்தது போன்ற பல காயங்களைக்கண்டு மனம் மிக நோகிறார் சுசி, மேற்கொன்டு அந்த வீட்டில் தனியே தனது பச்சிளம் குழந்தைகளுடன் தங்குவது உசிதமாகப் படவில்லை அவருக்கு, இதுவரை மனதில் கரையானாய் அரித்துக் கொன்டிருந்த பயமனைத்தும் ராட்சச வடிவெடுத்து தமை தாககுவதாய் உயிருக்குள் வலித்து அவருக்கு...! இனிமேலும் தன் பயத்துக்கு தான் அணைகட்டி வைத்த தைரியமும் தகர்ந்துவிட அருவியாய் விழிகள் நீரைச் சொரிகின்றன..., அக்கணமே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து முடிக்கு முன் சொல்லிவைத்தாற்போல் மாலை மறைந்து இருள் கவிய, குளிர் காற்று, முதுகெழும்பில் ஊசியாய் தைக்க இங்கொன்றும் அங்கொன்றுமாய் மழைத்துளிகள்...
சுசி கலங்கினாலும், வழக்கமான தனது தைரியத்தை பகீரதப் பிரயத்தனத்துடன் வரவழைக்கப் பார்க்கிறார், மழையில் பச்சிளம் குழந்தைகளை அதிலும் வாடிப்போயிருக்கும் இரண்டாவது குழந்தை, இவர்களை இந்த மழையில் திக்கற்று திசையற்று, துணையும் இன்றி எங்கே, எப்படி கொன்டு செல்ல முடியும் தனித்திருக்கும் அவரால் ? வருவது வரட்டும், கணவர் வரும் வரை அவரால் அந்த வீட்டை வீட்டு வெளியேற முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.
கவலையோடு அமைதியான சுசிக்கு அந்த வீட்டில் எங்கு நோக்கினாலும் உருவமில்லா ஏதோ ஒன்று தமை உற்று நோக்குவதாய் ஒரு உணர்வு, தனக்குப் பின்னால் தொடும் தூரத்தில் பின்தொடரும் ஏதோ ஒன்று, என பயம் விஸ்வரூபமெடுத்து விழுங்கத் துவங்கியது....
சிறிது நிதானித்து பின் ஏதோ நினைவால் உந்தப்பட்டது போல், சுவாமி மேடைக்கு கீழே மணிமொழியைக்கிடத்தி, திருநீரை அவள் நெற்றியிலிட்டு, உடலிலும் மெல்லத்தடவுகிறார். அயர்ந்து உறங்கும் குழந்தைக்கு அருகிலேயே மற்றக்குழந்தைகளையும் கிடத்திவிட்டு அவரும் சுவரோடு சுவராக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார், அவர் கையில் முன் அட்டை கிழிந்த ஒரு பழைய கந்த சக்ஷ்டி கவசம்... மெல்ல வாய் முனுமுனுக்க மெல்லிய அவர் குரல் கந்த சக்ஷ்டி வரிகளினூடே அங்கே நிலவிய ருத்ர பூமியின் மயான அமைதியை கிழித்துக்கொன்டு காற்றோடு நர்த்த்னமிட்டபடி வியாபிக்கின்றது...
வெளியே, கருமேகங்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க, பொழுது இருண்டு, அந்தி மழை ஒரு பெருமழைக்கு அச்சாரமாய் மழைத்தூரல்களால் பூமியை நனைத்து சட சட சத்தத்தோடு மண் வாசனையை மேலெழுப்புகிறது...!
தூரத்தில் சன்னமாய் தன் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது சுசிக்கு...! காற்றில் கலந்து ஓலமிட்ட அந்த குரல் சில நேரம் ஒலித்து தானே ஓய்கிறது மெதுவாய்...
சுசியோ, அந்த சுவாமிமேடையை விட்டு இம்மியும் அசையாமல், "காஸ் லைட் " என்று மின்சார விளக்குகள் அற்ற அந்தக் காலத்தில் ஒருவித விளக்குகளை உபபோகிப்பார்களே, அந்த விளக்கை ஏற்றி வைத்து கந்தர் சக்ஷ்டி கவசத்தை மனதுள் முனுமுனுத்தவாரே, வீடு திரும்பும் கணவனுக்காக விசனத்தோடு காத்துகொன்டிருக்கிறார்...!
சுசி அறியாத ஒரு உண்மை சில வருடங்களுக்கு முன் லாரியால் தலை நசுங்கி துர்மரணம் எய்திய சிவாவின் நினைவு நாள் அன்றுதான்...! விக்ஷம் தலைக்கேறியதைப்போல விக்ஷமம் புரியும் சிவா, துன்பத்தில் துடிக்கும் சுசியைப்பார்த்து வக்ரமாக மகிழ்கிறான், தன் தாயையே துன்புறுத்துவதாய் ஒரு சந்தோக்ஷம் அவனுள் பிரவாகமெடுக்கிறது..., மணிமொழியையும் மற்றக் குழந்தைகளையும் ஒரேயடியாய் மரணத்தை பரிசளித்து தன்னோடு இணைத்துக்கொள்ள துடிக்கிறது அவன் பேராசை, ஆனால் மணிமொழியைப் போல் மற்றக்குழந்தைகள் தன் பிடிக்குள் சிக்க விடாது காக்கும் சுசியின் மேல் மேலும் மேலும் கோபம் கனன்றது அவனுள்...!
சுசியையும், அவர் குழந்தைகளையும் வாட்டிய சிவா, தனது அடுத்த பலியாக வேலை முடிந்து வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கணவரிடம் தனது கைவரிசையைக் காட்ட ஆயத்தமாகின்றான்....!







ME the firstaa?
ReplyDelete//தாங்கள் பயந்து போனீர்கள், தனியே நடக்க தயங்குகிறீர்கள், என வரும் புகார்களும், மேற்கொன்டு பயத்தில் காய்ச்சலோ, அதிர்ச்சியோ ஏற்பட்டு குணப்படுத்த ஆகும் வேப்பிலை செலவு, போமோ செலவு போன்றவற்றிற்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் ஸ்டிரிக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம்//
ReplyDelete:))))))))))))
Good post.. Write other part as soon as possible
ReplyDeleteஇப்பிடில்லாம் பயமுருத்துவீங்களா நீங்க.. மம்மீஈஈஈஈ
ReplyDelete//இரவில் தனிமையில் படிக்காமல், கூட்டத்தோடு படித்து கும்மியடிக்க வேண்டும் //
ReplyDeleteநீங்க எப்படி தனியாத்தான் இரவில உக்கார்ந்து பதிவு எழுதிருங்களா?
*** தமிழ்ப் பூங்காவில் வண்ணத்துப் பூச்சியை காணோம்? பூ மட்டௌம் பெரிசா இருக்கு..
ஒரு வண்ணத்துப் பூச்சி ஒன்று வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் விரலோடு உள்ளது
குறை ஒன்றும் இல்லை !!!
ReplyDeleteyesss..!