.

.
.

Thursday, September 17, 2009

புறாவுக்கு பிறந்த நாளு! வாழ்த்துவோமே நாமும் இன்று!



நண்பர்களே, உங்களுக்கு சேதி தெரியுமா! நமது தமிழ் பதிவுலகில் சிறகு விரித்துப் பறக்கும் ஒரு அழகான, அமைதியான, அன்பான, அறிவான, அற்புதமான‌, அந்நியோன்யமான ("அ" வில ஆரம்பிக்கிற வேற நல்ல வார்த்தைகள் பிளீஸ்...!) புறாவுக்கு இன்று பிறந்த நாள்! :-)

ஆமாம், இன்று பிறந்த நாள் காணும் நம்ம ச‌மாதன‌ப் புறா சுபா அவர்களுக்கு, நமது மனம் நிறைந்த அன்பும், வாழ்த்துக்களும் உரித்தாகுக! தோழி வாழ்விலும், தாம் கைக்கொன்ட எல்லாத் துறைகளிலும் மேன்மேலும் "தல" சிறந்து விளங்கி, சாதனைப்பெண்ணாய் பூமியில் "பல ரவுண்டுகள்" வரவேண்டுமென்று ந‌ம்ம குல தெய்வம் மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வற்புறுத்தி வேண்டிக்கொள்கிறோம்! ‍

கலையாத கல்வியும்,
குறையாத வயதும் ,
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும் ,
குன்றாத இளமையும்
கழுபிணி இல்லாத உடலும்
சலியாத மனமும்,
அன்பகலாத மனைவியும்/(கணவரும்)
தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் ,
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் ,
கோணாத கோலும்-
ஒரு துன்பம் வாராத வாழ்வும் ,
துய்யனின் பாதத்தில் அன்பும்
உதவி பெரிய தொண்டரோடு கூட்டுகண்டாய்
இப்பதினாறு பேறுகளும் என்றும் பெற்று வளமாய்


அன்பான கண‌வரோடும், பிள்ளை குட்டிகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேர்த்திகள், கொள்ளுப்பேரன் பேர்த்திகள், எள்ளுப் பேரன் பேர்த்திகள் கூடவே புனிதாவைப்போல், குறை ஒன்றும் இல்லை அவர்களைப்போல்! இயற்கையைப்போல்! அடியேனைப்போல் சிறந்த நண்பர்கள் (அப்பாடா! சப்பான் சாடையிலே நம்மையும் சிறந்த நண்பர்னு சொந்தமா சொல்லி பாராட்டியாச்சு :-))) புடைசூழ சிரிப்பும் சந்தோக்ஷமும், களிப்பும், கலகலப்புமாக, கும்மாளமும் குதூகலமுமாக வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழ வாழத்துறோம்!

சரி சரி வெறும் பாராட்டுத்தானா! எனக்கேட்கும் சுபா அவர்களுக்கு வந்து குவிந்துள்ள பரிசுகளைப் பார்க்கலாம் வாருங்கள்!

முதலாவதாக சுபாவின் அம்மா அவர்கள்! சென்னை போத்திஸிலிருந்து சுபாவுக்காக ஒரு மிக மிக அழகான சந்தண நிறப்பட்டுப்புடவையோடு , அறவே விலை மதிக்க முடியாத அவரது அன்பு முத்தம் ஒன்று ஆசிர்வாதங்களின் கலவையோடு அன்பு மகளுக்காக!

அடுத்தாக சுபாவின், மறுபாதி! அவர் ஒரு அழகான பொட்டலம் ஒன்றை பரிசாக அனுப்பியிருக்கிறார், அதை யார் கண்ணிலும் படாமல் சுபா மறைக்க நாம் சிஐடி சங்கரியாக மாறி ஆராய்ந்ததில் கசிந்த உண்மை யாதெனில் அது அவரது ஆசைக்கணவரின் "அன்பு இதயமாம்"! ம்ம்ம் நல்லது நல்லது! :‍) சரியான நேரத்தில் சரியான பரிசு!

பிறகு, ஆ! அங்கே அழகாய் சிரித்துக்கொன்டு வருவது, அட நம்ம கவியரசி புனிதாதான்! தோழி என்ன பரிசு தருவார்? ஆவலோடு நாம் காத்திருக்க, தோழி விரைந்து வந்து சுபாவின் கையைப்பற்றிக்கொன்டு உருக்கமாக ஒரு கவிஜ பாட ஆரம்பித்துவிட்டார்!!!!!? என்னனு கேட்டா, அதுதான் அவர் பிறந்த நாள் பரிசாம்! பாவம் சுபா! :-( கோபத்தை அடக்கிக்கொன்டு, இரு இரு வச்சிக்கிரேன்! உன் பிறந்த நாள் வரட்டும்! என மனதிற்குள் கருவிக்கொன்டார் :-))

அடுத்ததாக நம் குறை ஒன்றும் இல்லை அவர்கள்! அமைதியாக வந்தவர் தமது சார்பாக சுபாவின் பதிவில் இட்டுக்கொள்ள "மலேசியா பாப்பம்மா" எனும் மிக உயரிய பட்டத்தை பெருமையோடு வழங்க, சுபா அதை ம‌கிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள! பிறந்த நாள் கூட்டம் நெகிழ்ச்சியோடு "மலேசியா பாப்பம்மா வாழ்க ! வாழ்க!" என ஆர்ப்பரிக்க, அட்டா சிறப்போ சிறப்பு !

அடுத்ததாக நம்ம இயற்கை அன்னையின் இ(னி)ளைய மகள், அழகான அவர் பெயர் இயற்கை மகள்!, நீலவான துகிலணிந்து, தென்றல்போல நடைபயின்று, புவி நோகாமல், அக்கினிச்சுடராய் ஒளிவீசும் வதனம் கொன்டு‌, தெளிந்த நீரோடைபோல் கனிந்த பார்வை கொன்டு சுபாவிடம் வருகிறார், வந்தவர் சுபாவுக்கு ஒரு அழகிய "ஏஞ்சல்" ஒன்றை கையில் கொடுத்து வாழ்த்தி வரமளிக்கிறார்! அடடா! ஒரு தேவதை தேவதையைப் பரிசளிக்கிற‌தே அதுவும் ஒரு தேவதைக்கு! (இயற்கை எப்போதுமே நமக்கு மிகவும் பிடித்த விக்ஷயம்!!!)

சரி சரி, அப்புறம் நீங்க என்ன பரிசு கொடுத்தீங்கன்னு தானே கேட்கறீங்க! ஒரு அழ‌கிய வைர அட்டியல், கூடவே செட்டாய் நாலு தங்கக்காப்புகள் , ஒரு சோடி நீலக்கல் பதித்த தேன்கூடு தோடு! அப்புறம் கையில் வச்சுக்கப்பா செலவுக்குன்னு ஒரு பத்தாயிரம்! வாவ்!
.
..
...
:-)
எல்லாம் கொடுக்க‌னும்னு ஆசைதான்! (அப்ப கொடுக்கலியா? வெறும் லுல்லுல்லாயியா!!!!?) ஆனால் பாருங்க‌! ம‌ன‌சுக்கு இருக்கிற‌ பெருந்த‌ன்மை மணிப‌ர்சுக்கு இருக்கமாட்டேங்குதே‌ என்ன‌ செய்ய!!!? அத‌னால‌, என‌து சார்பாக‌, என‌து அன்பு, அக்க‌ரை, பாச‌ம், நேச‌ம், அத்த‌னையும் ஒரு பெரிய‌ பொட்ட‌ல‌மாக‌க் க‌ட்டி தோழிக்கு ப‌ரிசாக ஏற்கனவே ஈமெயிலில் அனுப்பிவிட்டேன்! :-)

ச‌ரி ந‌ண்ப‌ர்க‌ளே, இந்த‌ குதூக‌ல‌மான‌ நிக‌ழ்ச்சியில் கூட‌வே ஒரு ம‌கிழ்ச்சியான‌ செய்தி, (நாம் சொல்லும் முன்பே, அப்பாடா இன்னைக்கு ம‌ர்ம‌ப் ப‌திவு இல்லை என்ப‌து தானே அது என்ப‌வ‌ர்க‌ளுக்கு) இதோ, இதோ வ‌ந்துகொன்டே இருக்கிற‌து, ஆத்மா எட்டாம் பாக‌ம், பாக‌ம் தான் எட்டு! முடிவோ இன்னும் எட்டாம‌ல் தான் இருக்கிற‌‌து! என்ன‌ செய்வ‌து நண்ப‌ர்க‌ளே, விதி வ‌லிய‌து அல்ல‌வா? :-)

நல்லது நண்பர்களே! புறப்படும் முன்பாக நம்ம சுபாவுக்காக பிரத்தியேகமாக ஒரு இனிமையான பாடல்! உலகிலேயே மிகவும் அதிகம் பேரால் தினம் தினம் விரும்பி பாடப்படும் இனிய பாடலான " ஹேப்பி பேர்த் டே" பாடல் இதோ சுபாவுக்காகவே விசேக்ஷமாக!

நண்பர்களே இன்று நமது தோழிக்கு பிறந்த நாள், எனவே எல்லோரும் ஓடிவந்து உங்கள் நட்பான வாழ்த்தை தோழிக்கு சமர்ப்பிக்கும்படி விண்ணப்பித்துக்கொன்டு விடைபெறுகிறேன்!

மீண்டும் ச‌ந்திப்போம்! என்றும் அன்போடு....!


12 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்த....

நானும் சொல்லிக்கிறேன் ..மலேசியா பாப்பம்மா வாழ்க...

Subha said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழியே :)

*இயற்கை ராஜி* said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சிவனேஸ்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபா

Tamilvanan said...

பிறந்த நாள் வாழ்த்து, சுபா.

மனோவியம் said...

உங்கள் அன்புத் தோழிக்கு எனது வாழ்த்துக்கள்.பிற்ந்த நாள் விருந்து இல்லையா?

sivanes said...

குறை ஒன்றும் இல்லை !!!

எல்லாம் உங்களைப்போன்ற‌ புண்ணியவான்களின் ஆசிர்வாதம்தானுங்கோ சாமி!

sivanes said...

சுபா

அம்மிணி தங்களின் உள்ளக்களிப்பே, இந்தப் பதிவின் வெற்றி!

sivanes said...

இய‌ற்கை

இயற்கையே வாழ்த்துவது எமை ஆன‌ந்தத்தில் ஆழ்த்துகிறது! ரொம்ப்ப்ப நன்றிப்பா!

sivanes said...

Tamilvanan

வாழ்த்து மட்டும்தானா தல! பரிசு, பரிசுன்னு சொல்வாங்களே அதெல்லாம் கிடையாதா ?

Anonymous said...

//பிறகு, ஆ! அங்கே அழகாய் சிரித்துக்கொன்டு வருவது, அட நம்ம கவியரசி புனிதாதான்! தோழி என்ன பரிசு தருவார்? ஆவலோடு நாம் காத்திருக்க, தோழி விரைந்து வந்து சுபாவின் கையைப்பற்றிக்கொன்டு உருக்கமாக ஒரு கவிஜ பாட ஆரம்பித்துவிட்டார்!!!!!? என்னனு கேட்டா, அதுதான் அவர் பிறந்த நாள் பரிசாம்! பாவம் சுபா! :-( கோபத்தை அடக்கிக்கொன்டு, இரு இரு வச்சிக்கிரேன்! உன் பிறந்த நாள் வரட்டும்! என மனதிற்குள் கருவிக்கொன்டார் :-))
//


Grrrrrrrrrrr


Many More Happy Returns of The Day My Dear Friend :-))

sivanes said...

புனிதா||Punitha

அட‌ யாருப்பா அது! புனிதாவுக்கு கோபமே வராதுன்னு பொய் சொன்னது ? ஹி ஹி ஹி...
:-))

sivanes said...

manokarhan krishnan
பிற‌ந்த நாள் விருந்துதானே நண்பரே! தமிழ்ப்பூங்காவிலேயே தாராளமாக‌ வைத்துவிடுவோம்! மொய்யும் கைய்யுமாக வந்துசேர்ந்துவிடுவீர்கள் அல்லவா?