.

.
.

Saturday, December 26, 2009

உள்ளேன் ஐயா...!

வணக்கம் தெய்வங்களே, நலமும் சுகமும் நமதாகுக...!

மனித வாழ்க்கை மிகமிக மகத்தானது, இந்த உலகின் அதியற்புத, புதிர் மிகுந்த ஓர் அம்சம் என்று அடியேன் சொன்னால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்களா நண்பர்களே? பின்னே, ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும், ஏனென்றால் அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது அல்லவா?

வாழ்க்கைப்பாதையானது மிகமிக நேர்த்தியானது! அதிசயமானது! வித்தியாசமானது! காலத்தின் கை பிடித்து பயணிக்கும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்! மாற்றங்கள்! ஏற்றத்தாழ்வுகள்! சுகதுக்கங்கள்! வெற்றி தோல்விகள்! உறவுகள் பிரிவுகள்! உண்மைகள் பொய்கள்! நிஜங்கள் நிழல்கள்!

வானவேடிக்கை இந்த வாழ்க்கை! அதில் மாற்றங்கள் எனும் வர்ணஜாலங்கள்! (எதற்கு இத்தனை பில்டப்புகள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது)

என்ன செய்வது, நம்ம வாழ்விலேயும் ஆண்டவன் அப்பப்போ அன்போட வந்து பாண்டி விளையாடிட்டு போறாரே, அதனால்தான் இந்த பிதற்றல், வேறென்ன சொல்ல! :-)

சில காலங்களுக்கு முன் வெளியீடு கண்ட உலகநாயகனின் "ந‌ம்மவர்" திரைபடத்தில் ஒரு காட்சி, அதில் முதிர்ந்த ஆசிரியர் திரு. நாகேக்ஷ் அவர்கள் அந்தப் பள்ளிக்கு புதிய ஆசிரியராக வரும் தனது முன்னால் மாணவன் @ நம்ம உலகநாயகன் அவர்களைப்பார்த்து ஒரு கமெண்டு அடிப்பார் பாருங்கள்! ஆசிரியர்களை அதிர வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஆசிரியராகும்போது தான் அந்த "பரவச" நிலையை உணர்வர் :-( அந்தக்காட்சியின் அர்த்தம் இப்பொழுதுதான் நமக்கும் புரிகிறது!

இந்தச் சந்தர்ப்பத்தில் ‌அடியேனுக்கு எழுத்தறிவித்த அத்தனை மூன்றாவது தெய்வங்களுக்கும் நமது முதற்கண் வணக்கம் உரித்தாகுக...! பாவம்யா அவங்க, நம்மையும் சமாளிச்சு கற்று கொடுத்திருக்காங்கன்னா, அவங்க கிரேட் தான். ஏன்னா இப்போ நாம குதிச்சிருப்பது அவங்க கோதாவிலேதான் :-)இப்போ மேற்காணப்பட்ட பிதற்றல்களுக்கான காரணம் :-(

இப்பதிவுலகிலும் சிறந்த பதிவர்கள் சிலர் ஆசிரியராக‌ விளங்குவது அறிகிறோம், அவர்களுக்குக்கும் இவ்வேளை நல்வாழ்த்துக்கள், (தெய்வம்பா நீங்கள்லாம்! :-)

சரி சரி நம்ம சுயபுராணம் போதும் விக்ஷயத்துக்கு வருவோம். பணியில் ப‌டுபிசியாக இருந்த காரணத்தினால் பதிவுப்பக்கம் தலை வைத்தே நாம் படுப்பதில்லை என்ற உண்மை அறிந்த ஒரு தமிழ்நெஞ்சம் தமது பதிவில், "ஏன் பதிவு எழுதுவதில்லை ?" என நண்பர்களோடு சேர்த்து நம்மையும் லெப்டு ரைட்டு வாங்க....

நமக்கு வெட்கம்! வேதனை! அவமானம் ஆகிப்போச்சு நண்பர்களே! இருந்தாலும் நாம யாரு? "கண்ட்ரோல் மாச்சோ"வாக அதையெல்லாம் அப்படியே மறைச்சு வச்சிட்டு, ஒரு பின்னூட்டம் வைத்து "உள்ளேன் ஐயா" அப்டின்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா அங்கிருந்து ஓடியாந்திட்டோம்ல! :-)(
தங்களின் பதிவுப் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நமது நண்பர்களுக்காகவே விக்ஷேசமாக அந்தப் பதிவுக்கு இங்கேயும் தரவிறக்கம் வசதி செய்யப்பட்டுள்ளது, பதிவ நண்பர்கள் கண்டிப்பாக படித்து பாட்டு வாங்கிக் கொள்ளுங்கள்! சரியா? இதோ உங்களுக்கே உங்களுக்காக..., http://manilvv.blogspot.com/2009/12/blog-post_14.html


சிவனேசு : "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
மனசாட்சி : "ம்ம்ம் எனக்கு மட்டும்தானா திட்டு ? நண்பர்களும் வாங்கிக்கொள்ளுங்கள் :-))


அடடா நாம் சொல்ல வந்த விக்ஷயமே வேறு, அதை விட்டுட்டு என்னென்னமோ பேசியாச்சு...


நல்லது நண்பர்களே, தற்பொழுது அநியாயத்துக்கு லேட் ஆகி, விடிகாலை மூன்று மணி என்று அலாரம் சுட்டுவதால், இப்போ நான் நித்திராதேவியை சந்திக்கப் போறேன்(தூங்கப்போகிறேன்), மீண்டும் கூடிய விரைவில் (நண்பர்கள் திட்டுவத‌ற்கு முன்பதாகவே) சிலபல சுவாரசியமான விடயங்களோடு மறவாது தங்களனைவரையும் சந்திக்கிறேன்...!

பின்குறிப்பு : நாமளும் ஒரு பதிவு போட்டாச்சு சாமியோவ்!

6 comments:

Sathis Kumar said...

வாங்க சிவனேசு.. ஆசிரியர்த்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.. கலக்குங்க.. :)

sivanes said...

ஒற்றன் : நன்றி ஒற்றரே, நிச்சயம் முயற்சி செய்கிறேன் :-)

மனோவியம் said...

வாழ்துக்கள் டீச்சர்....ஆசிரியர் தொழில் என்பது ஒரு இலகுவான தொழில் அன்று.பல்முனை போராட்டங்களை சந்திக்கும் ஒரு துறை.சிலர் நினைபதை போன்று சுலபமான வேலை இல்லை.வேலை பழு அதிகம். மன அழுத்தம் நிறைந்த தொழில். கிடைக்கும் சிறிது ஒய்விலும் பதிவெழுதும் உங்களுக்கு எனது ம்னமார்ந்த வாழ்த்துக்கள்...

sivanes said...

மனோகரன் கிருட்ணன்

நல்லா பாட்டு குடுத்திட்டு, இப்படி நல்லபடி பாராட்டும் குடுக்கிறீங்களே...? நீங்க ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவிங்க பாஸ்! :-))

Tamilvanan said...

வ‌ண‌க்க‌ம் டீச்ச‌ர்.வாழ்த்துக்க‌ள்.இனிமேலாவ‌து ந‌ல்ல‌ டீச்ச‌ரா இருந்து ஆவிக் க‌தைக்கு (ம‌கா தொட‌ருக்கு) ஒரு முற்றுப் புள்ளி வைச்சுருவிங்க‌ தானே? எங்க‌ள‌ மாதிரி ந‌ல்ல‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ க‌தையை ம‌ட்டும் சொல்லிக் கொடுங்க‌.ஒ கே வா..

sivanes said...

Tamilvanan

நல்லது நாட்டாமை! நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன்.