"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பணமயமாக விளங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட பணம் ஈட்டி நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காணமுடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!
ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ? நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிறமொழிப் பள்ளிகளே சிறந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்றனர்.
ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.
சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாணவர்களும், சீன மாணவர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடளவில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிறகேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?
மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாணவன்
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாணவன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமதமாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?
இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்பட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாணவனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்றனர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?
இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விளங்கும். தன்னிடமுள்ள சிறப்பை உணராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..!
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இளவயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிறது ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாளம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரணகர்த்தா ஆகலாமா ?
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் நம்மின மாணவர்களுக்கு திறமை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாணவர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?
இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம்.
"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பணமயமாக விளங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட பணம் ஈட்டி நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காணமுடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!
ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ? நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிறமொழிப் பள்ளிகளே சிறந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்றனர்.
ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.
சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாணவர்களும், சீன மாணவர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடளவில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிறகேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?
மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாணவன்
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாணவன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமதமாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?
இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்பட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாணவனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்றனர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?
இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விளங்கும். தன்னிடமுள்ள சிறப்பை உணராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..!
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இளவயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிறது ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாளம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரணகர்த்தா ஆகலாமா ?
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் நம்மின மாணவர்களுக்கு திறமை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாணவர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?
இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். எனவே இந்தியப் பெற்றோர்கள் கல்வியோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை மிகுந்த நமது பாரம்பரியம் ஆகியவற்றை முறையே கற்றுத்தேற வழிவகுக்கும் தமிழ்க்கல்வியை அவசியம் தங்களது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.
200 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வியினை வெற்றிகரமாய் வரவேற்கும் நாம் , இம்மண்ணில் தமிழ்மொழிக்கல்வி மேன்மேலும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, வாழையடி வாழையாய் தழைக்க நமது இளவல்களை தமிழ்ப்பள்ளிகளில் இணைப்போம், தமிழ்மொழிக்கல்வியின் வாயிலாய் அவர்களை சிறந்த மாந்தர்களாய் வார்த்தெடுப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்க்கல்வி
ஆக்கம்
சிவ.ஈஸ்வரி
பினாங்கு
No comments:
Post a Comment