.

.
.
Showing posts with label மொழியியல். Show all posts
Showing posts with label மொழியியல். Show all posts

Thursday, April 10, 2014

தமிழ்மொழிக்கல்வியின் அவசியம்

"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன் 
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..! 

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?    
  
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். 
"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன்
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..!

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?  
   
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். எனவே இந்தியப் பெற்றோர்கள் கல்வியோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை மிகுந்த நமது பாரம்பரியம் ஆகியவற்றை முறையே கற்றுத்தேற வழிவகுக்கும் தமிழ்க்கல்வியை அவசியம் தங்களது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

200 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வியினை வெற்றிகரமாய் வரவேற்கும் நாம் , இம்மண்ணில் தமிழ்மொழிக்கல்வி மேன்மேலும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, வாழையடி வாழையாய் தழைக்க நமது இளவல்களை தமிழ்ப்பள்ளிகளில் இணைப்போம், தமிழ்மொழிக்கல்வியின் வாயிலாய் அவர்களை சிறந்த மாந்தர்களாய் வார்த்தெடுப்போம், வாழ்க தமிழ், வள‌ர்க தமிழ்க்கல்வி

ஆக்கம்

சிவ.ஈஸ்வரி
பினாங்கு

   
      

Monday, April 7, 2014

 கடுப்படிக்கும் விளம்பரங்களும், கவலைப்படும் தமிழ் நெஞ்சங்களும்...!



நம் நாட்டில் மிகப்பெரிய மூவினங்களாக அங்கீகரிக்கப்பட்டவை மலாயர், சீனர் மற்றும் இந்தியர்கள், (வெளி நாட்டுக்குடியேறிகள் தற்சமயம் அதிகரித்து வருவது வேறு ஒரு தலைவலி..!) இந்நாட்டில் திராவிட இனங்களான‌ தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்களோடு சீக்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர், எனினும் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தமிழ் மொழி இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மூன்றாவது மொழியாக ஆங்கிலம், மலாய்க்கு அடுத்து இந்தியர்களுக்கு தமிழும், சீனர்களுக்கு மான்டரீன் மொழியும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒற்றுமையில் சிறந்தவர்கள் சீனர்கள் என்பது வெள்ளிடைமலை, தங்கள் பெயர்களிலேயே தங்களை பிரிவுபடுத்தும் சாதிப்பிரிவுகள் பல இருந்தாலும், த‌ங்கள் இனத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் மான்டரீன் மொழியை தங்கள் பிரதிநிதித்துவ மொழியாக உள‌மாற ஏற்று இந்நாட்டில் உருப்படியாய் வாழ்ந்து வருகிறார்கள், தங்களை பிரதிநிதிக்கும் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் ஏற்படுத்திக்கொன்டு !  இன்று சீன மொழியை யாராவது சிறுமைபடுத்திப் பார்க்க முடியுமா ? அப்படிச் செய்ய முனைந்த அரசியல்வாதிகளின் மூக்கை அவர்கள் எப்படி உடைப்பார்கள் என்பதை அரசியல் அறிந்தோர் நிச்சயம் அறிந்திருப்பர், ஆனால் இந்தியர்கள் ? 

தற்கால சூழலில் ம்லேசிய இந்தியரிடையே பல பிரிவுகள், ஆயிரத்தெட்டு அரசியல் கட்சிகள், சாதிச்சங்கங்கள் இவை தனிமனிதனுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆற்றிடும் நன்மைகள் என்ன என்பதை எல்லோரும் சிந்தித்துச் சீர்தூக்கிப்பார்க்க‌ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ! எனும் உண்மை தற்காலத்தில் மறக்கப்பட்டு வருவது கண்கூடு. சுயநலம், சுயலாபம் மட்டுமே பிரதானம் என இயங்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம். பொருளாதாரத்தில் உயர்ந்தோர் மேல்நாட்டு ஆங்கிலேயர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முயல்வது மறுபுறம்..!

நேற்று வடக்கு நெடுஞ்சாலையில் (பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லும் வழியில்) பயணித்துக் கொன்டிருக்கையில் ஒரு காட்சி, அது ஒரு ரொட்டி(பிஸ்கோத்து) விளம்பரம், பெரிய காட்சிப்பேழையாக‌ (பேனராக) வைக்கப்பட்டிருதது, அதிலே நம் நாட்டின் மூவினப் பெண்களும் அந்த பிஸ்கோத்தை உண்டுவிட்டு தங்கள் கருத்தை ஒரு வார்த்தையில் சொல்கிறார்களாம், மலாய் பெண்மணி மலாயில் ஒரு வார்த்தை, சீனப்பெண்மணி மாண்டரீன் மொழியில் ஒரு வார்த்தை, அடுத்து சேலையணிந்த ஒரு பெண்மணி ஒரு வார்த்தை சொல்கிறார் அது என்னவென்றே புரியவில்லை, காரணம் அந்த எழுத்து இந்திமொழியில் இருக்கிறது !!!.

பார்த்தீர்களா தமிழுக்கு நேர்ந்த தலைகுனிவை ?, இது மட்டுமல்ல, இப்போது பல தொலைக்காட்சி விள‌ம்பரங்களிலும் பல வகைகளில் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி இந்தியர்களில் ஒரு பிரிவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், பொருளாதரத்திலும், கல்வி நிலையிலும் மேம்பட்டு உள்ள சீக்கியர்களை மட்டுமே இந்தியர்களாக அடையாளம் காட்டும் முயற்சி தற்பொழுது பரவலாக இங்கே சிலரால்  மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் காணக்கிடைக்கும் காட்சிகளே.ஏனென்று கேட்க பாவம் இந்த அநாதைச் சமுதாயத்திற்கு ஆளில்லை...! 

ஏன் இந்த நிலை ? என்ன செய்து கொன்டிருக்கின்றார்கள் நம் பிரதிநிதிகள் ? இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு வேறென்ன வேலை ? ஓட்டுப்போட மட்டும்தான் நாமா ? நமக்கென ஒரு பிரச்சனையென்றால் இவர்கள் யாரும் கேட்க மாட்டார்களா ?

தமிழுக்கு முக்கியத்துவம் கோரப்பட‌ வேண்டும், சிங்கையில் அமைந்துள்ளதைப்போல அரசியல்ரீதியில் தமிழ் இங்கே இந்தியர்களுக்கு கட்டாய மொழியாக்கப்பட வேண்டும், மேற்கல்விகளுக்கும் தமிழ் அவசியமாக்கப்படவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சார்ந்த மேன்மைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தமிழறிந்தவர்களாக, தமிழை வாழவைப்பவர்களாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் ! இனிவரும் காலங்களில் இவற்றை செய்வோமா நாம் ?

Monday, November 18, 2013


ஒரு முற்றுப்புள்ளியைத் தேடும் காற்புள்ளி...!

 

காலம் முற்றுப்புள்ளி வைத்து உறவுகளை பிரித்தாலும் அன்பு நினைவெனும் காற்புள்ளிகளால் மனதில் அவற்றை வாழ்வித்துக்கொன்டுதான் இருக்கின்றது என்றும்.....!


சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியொன்று கூடு பிரித்து தனது மெல்லிய‌ இறக்கைகள் மீட்டியபடி, இவ்வுலகின் அற்புதங்களை, பரவிக் கிடக்கும் எழில் நர்த்தனங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து பிரமித்து, படித்துக்கொள்ள, மனதில் படம் பிடித்துக் கொள்ள விழையும் பருவம் ! குழந்தைப்பருவம் களைந்து சிறுமியாக பரிமாண‌ம் கண்டுகொண்டிருந்த சமயம்.

அப்படியானதொரு தருணத்தில் என் கையை தன் கைக்குள் சேமித்துக்கொன்டு அந்த மண‌ல் மேட்டு ஒற்றையடிப் பாதையில் அவர் நடந்து கொண்டிருந்தார், அவரின் பருத்த 70 வயது வயோதிக உருவம் இப்படியும் அப்படியுமாக என்னுடன் அசைந்தாடி நடக்க‌, அருகில் இருக்கும் அங்காடி வீதி  நோக்கி நகர்கிறது எங்கள் பயண‌ம். ஒருநாள் இருநாள் அல்ல ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பிடித்த தின்பண்டங்கள் வாங்கவே இந்த நடைப்பயணம். என் அருமைப் பாட்டியார்,  எப்பொழுதும் காலையில் நடைப்பயண‌ம் செல்கையில் இதற்காக‌ என்னையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். தன்னிடமிருந்து நான் பிரியாதிருக்க பிரியத்துடன் என்னை மெல்ல அணைத்தபடி நடப்பது அவர் ப‌ழக்கம்.


என்னை மெல்லத் தொட்டுப் பற்றியிருக்கும் அவர் கையின் இளஞ்சூட்டைப் போலவே மெல்லிய கதகதப்பைப் பரப்பியபடி கிழக்கு வானில் பொற்கதிர்கள் ஒளி வீச எழுந்து வந்து எங்களோடு நடப்பான் இள‌ஞ்சூரியன்.

அவருடன் எனக்குடனான உற‌வு ஒரு பத்து வருடம் நீடித்திருக்குமா என்பதும் சரியாகத் தெரியவில்லை ! ஆனால் என் இளம் பிராயத்தின் மொத்தத்தையும் அவரே குத்தகை எடுத்துக்கொன்டது போல் ஒரு பிரமை,  நினைவை விட்டு நீங்காது இன்றும் மனதுள் நிழலாடும் அவர் நினைவுகள்...! அன்பால் நெஞ்சம் நிறைத்த‌ உறவுகள் எத்தனை தூரத்தில் இருந்தாலும், மறைந்தாலும் மனதிற்கு அருகாமையிலேயே இருப்பதான பாவனை.  இதுதானோ வாழ்க்கை !!!

அவ்வப்போது அம்மாவைச் சீண்டிப் பார்ப்பதுண்டு, ஏம்மா ! பாட்டிதானே(அப்பத்தா) என்னை சின்ன பிள்ளையில் வளர்த்தாங்க ? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் முகம் சிவந்து, அம்மாவின் கோபம் எல்லை மீறும், யாரிடமும் தன் தாய்மை தோற்றுவிடக்கூடாது எனும் துடிப்பு,  யார் சொன்னது ? அப்போ நான் எங்கே போயிட்டேனாம் ? அதெல்லாம் கிடையாது ! உன்னை நான்தான் வள‌ர்த்தேன் என்பார் ! பின்னர் மெதுவாக, ஏதோ ஒரு சில மாதங்கள் அவர் உன்னை தன்னுடன் வைத்து வளர்த்தார், என்பார் பட்டும் படாமல். ஆகா !  உண்மை வெளிவருகிறது....! 

பாட்டியை அதிகம் பிடிக்கும் !, அதிகம் என்றால், இரு கைகள் பிரித்து "இவ்ளோ பெரிச்சா" என கண்கள் மலர ஒரு சிறுமி பிரமிப்பதைப்போல, அதையும் விட மண்ணைத்தாண்டி, விண்ணைத்தாண்டி, இந்தப் பிரபஞ்சம் அளவு அவர் மீது கொட்டிக் கிடக்கும் அன்பு, பாட்டிக்கும்தான் என்மீது ! அந்த அன்பை பகிர்ந்து அளவளாவ, இன்று அவர் அருகில் இல்லை, நினைவுகள் மட்டும் நெஞ்சை நிறைக்க, அவர் உடலை தீ தின்று  வருடங்கள் பல கடந்து விட்டன..! ஒரு நவம்பர் மாதத்து மழை நாளில் அவர் இந்த மண் விட்டு மறைந்தார். மனதைவிட்டு மட்டும் இன்றும் மறையவே இல்லை !

அவரை எண்ணி பிரமிப்பதற்கு பல காரணங்கள் உண்டு..! முக்கியமாக இயற்கையை வணங்கும் அவரின் உயர்ந்த குணம், இயற்கையென்றால் இறையென்பதை உண‌ர்த்தியதில் பெரும் பங்கு அவருடையது...!

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வெளியே கிழக்கு நோக்கி நின்று தனது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி உதித்துவரும் கதிரவனை அவர் வ‌ணங்கி வரவேற்பார், "எல்லோரையும் நல்லா வச்சிருப்பா" என சூரிய பகவானை அவர் சத்தமாக வண‌ங்குவது பார்க்கவும் கேட்கவும் அத்தனை அழகாக இருக்கும். "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" எனும் ஒற்றைவரிப் பிரார்த்தனையைத்தான் அவர் அத்தனை நேரம் சூரியனைப் பார்த்து தனது பாணியில் சொல்லிக்கொண்டிருப்பார்.

ஏன் பாட்டி வெளியே கும்பிடுறீங்க ? என்றால் இதுதான் சூரியபகவான், நமது கடவுள்! சோறு தருது ! உயிர் தருது ! இதக் கும்பிடனும்மா ! என தனது கண்கள் சிரிக்க புன்முறுவலுடன் பதில் அளிப்பார்..! அவர்போல் ஆச்சாரம் இல்லை இருப்பினும் அவரின் வழித்தோன்ற‌ல் அல்லவா ? என்றும் இயற்கையை மனதால் வணங்கிப் பிரார்த்திப்பது உண்டு, ப‌ல பொற்றருணங்களில் அதன் ஆற்றலை உண‌ர்ந்து அதிசயித்ததும் உண்டு, சூரியபகவான், ஆகாசவாணி, பூமாதேவி, வாயுபகவான், வருணபகவான், அக்கினி பகவான் என இந்து மதம் இயற்கையை இறைப்பெயர் சூட்டி போற்றுகிற‌து ! இயற்கையுடன் இசைந்து வாழும் மனித வாழ்க்கை மகத்தானது என சாஸ்திரங்களும் போதிப்பதை, அன்று பாட்டி போதித்து மனதில் பதித்தார் ...!

பாட்டியின் தோற்றம் கம்பீரமானது, உயரமானவர், இரட்டை நாடி சரீரம்,  முழங்காலைத் தொடும் நீளமான கூந்தல், கஞ்சித்தண்ணீர், சீயக்காய் வில்லைகள் சேர்த்து சொந்தமாய் சாம்பு தயாரித்து உபயோகிப்பார், சோப்பெல்லாம் அவருக்கு ரொம்ப தூர‌ம்,  உண்பதற்கு மிகவும் சுவையான "வோக்ஷேல்" சாக்லெட்டின் நிறம் அவருடையது, அதிகம் கருப்போ, வெளுப்போ இல்லாமல், பாலும், கொக்கோவும் சம அளவு கலந்ததைப்போல் ஒரு நிறம் . அவரின் முகத்தோற்றம் அப்பாவை ஒத்திருக்கும், அப்பாவுக்கு பெண்வேடமிட்டால், அதுதான் பாட்டி ! , இருவருக்கும் அப்படி ஒரு முகஒற்றுமை  ..!     
  
பாட்டியின் ஆளுமை மிகவும் ஆழமானது, குடும்பத்தினர் அனைவரையும்
தனது அன்பெனும் பிடியில் அடக்கி வைத்திருந்தார். தனது அந்திமக் காலத்தில் உடல் தளர்ந்து, நினைவு தப்புவதற்கு முன்புவரை அவர்தான் குடும்பத்தின் மகாராணி! அவர் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது ! குடும்பத்தின் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் அனைத்தும் அவரை மையப்படுத்தியே நிகழும். அவர் முடிவுகளே குடும்பத்தை ஆளும்.

எல்லாவற்றையும் விட என்னை பிரமிக்கச் செய்தது எல்லோரையும் ஓட ஓட விரட்டும் அப்பா, அவருக்கு மட்டுமே பணிவது. அதைப்பார்க்க மிகவும் ஆனந்தமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். சிவாந‌ந்தம் ! சிவாந‌ந்தம் ! என அவர் கூப்பிட்ட குரலுக்கு பணிவோடு அவர் முன் நிற்கும் அப்பா, அவரிடம் தாழ்ந்த குரலில் அமைதியாக பேசுவதையும், அவர் கூறுவதை தலையாட்டி ஏற்றுக்கொள்வதையும் பார்க்க வேடிக்கையாகவும், அதிசயமாகவும் இருக்கும். வேறு யார் முன்னும் அப்பா இப்படி இறங்கிப் பேசிப் பார்த்ததேயில்லை..! எப்போதும் தடாலடிதான். வீட்டிலுள்லோர் அனைவரும் பயப்படும் அப்பாவையே அடக்கும் பாட்டி என் கண்களுக்கு "சூப்பர் ஊமன்" ஆகவே தெரிந்தார்.

பாட்டி மக்களைப் பெற்ற மாதரசி..! பதினாறு குழந்தைகள் அவருக்கு..!!! அவர் வாழும் காலத்திலேயே வறுமையிலும், நோயிலும் 10 மக்களை பறிகொடுத்தவர். இறுதியாக அவரின் எழுபதாம் வயதில் அவரின் 50 வயது தலைமகளை(மூத்த பெண்) புற்றுநோய் பலிகொள்ள ரொம்பவே வாடி ஒடிந்து போனவர். இன்று அவர் குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் அப்பா அவரின் எட்டாவது குழந்தை..!  

பாட்டியுடன் கழிந்த பொழுதுகள் சுகமானவை, சுவாரசியமானவையும் கூட...! அடியும் நுனியும் கிள்ளி வெற்றிலைபோடக்கொடுப்பார். அவரைப்போல் வாய் சிவக்காது ஆனால் உறைப்போடு வாய் மட்டும் எரிச்சலாய் இருக்கும். அவர் இரவு நேரங்களில் ஒற்றை பிள்ளை சாப்(முத்திரை) சுருட்டை புகைப்பது வழக்கம்.  அப்பா அறியாமல் அதையும் வாங்கிப் புகையை இழுத்ததுண்டு..!(ரகசியம்!) கசப்பான புகை, நெடிய நாற்றத்தோடு...! மூக்கிலிருந்து தொண்டை, நாக்கெல்லாம் கசப்பு, எரிச்சல் என என்னென்னவோ செய்யும்..! ஆனால் அந்த சுருட்டின் புகையும், தீ கங்கும் பார்க்க பார்க்க அழகாகவே தோன்றும்

சிரித்துக்கொன்டே பாடுவதும் கதைகள் பேசுவதும் அவர் சிறப்பு.
நாடோடிப் பாடல்களை பாட்டி நன்றாகப் பாடுவார். தாலாட்டுப் பாடல்களிலும் , ஒப்பாரிப் பாடல்களிலும் மகா கெட்டி...! கைகளை மடக்கிக் கக்கத்தில் இடுக்கி பறவை சிறகடிப்பதைப்போல கைகளை அடித்துக்கொன்டு

"ஓ ரப்பர் பாலே,
நாஞ் சொல்லுவதேக் கேளு..!
குப்புறப் படுத்துக்காதே ரப்பரு பாலே,
நாங் கப்ப ஏறி வந்துட்டேன் ஏங் கெப்புரு நாலே "

என பாடிச் சிரிப்பார்..! எப்போதாவ‌து அப்பா கண்ணில் பட்டுவிட்டால், இதயெல்லாம் பிள்ளைக்கு கத்துக்கொடுக்காதம்மா என்பார், ஆனால் அவர் எங்களைக் கடந்து சென்ற பின் "ச‌ர்தான் போ" என அலட்சியம் காட்டி மீண்டும் தொடர்வார் பாட்டி.

நாட்டு வைத்தியத்திலும் பாட்டி கைதேர்ந்தவர். சுளுக்கெடுப்பதிலும், பிரசவம் பார்ப்பதிலும் கெட்டிக்காரர். அவர் வைத்தியத்தில் பலனடந்தவர்கள் விருந்தாகவும், துணிமணிகளாகவும் அவருக்கு பரிசளிப்பது வழக்கம். அவருக்கு மருளும் வரும். வீரன் சாமி வந்தது என்று ஆணுடை தரித்து, இடையில் வேட்டி சுற்றி சுருட்டை புகைத்தவாரே ஆணின் கரகரப்பான குரலில் அருள்வாக்கு சொல்வார்! திருநீறு இடுவார், பரிகாரங்களும் சொல்வார்.

இப்படியாக வாழ்ந்தவர், காலவோட்டத்தில் தோட்டம் விட்டு, மக்களோடு பட்டிண‌ம் வந்தார், மேலும் வயது முதிர, ஒருநாள் குளியலறையில் கால் தடுக்கி வீழ்ந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ஏற‌க்குறைய 3 வாரங்கள் சுய நினைவின்றி படுத்த படுக்கை, வெறும் பால் மட்டுமே உண‌வு.

நான் ஆரம்பப்பள்ளியில் பயின்று கொன்டிருந்த சமயம் அது, எதுவும் புரியவில்லை! பாட்டி போகப் போகிறார் என எல்லோரும் பேசியது மிக மிக பயமாகவும், வருத்தமாகவும் இருந்தது, ஓடிச் சென்று ஒரு ஒற்றை வரி நோட்டை எடுத்து "ஸ்ரீ ராமஜெயம்" எழுத ஆரம்பித்தேன்.பாட்டியை இறைவன் காப்பாற்றித் தருவார் எனும் நம்பிக்கையோடு.  விடயம் அறிந்தவுடன் பாட்டியின் மகள்களுள் ஒருவர். என்னை அழைத்து கடுமையாக திட்டினார்..! அவர் அம்மா பிழைத்துவிடக்கூடாதாம்! துன்பமின்றி தன் தாய் (பாட்டி) போய் சேர வேண்டும் எனும் காரூண்யம் அவர் செய்கையில் தெரியவில்லை, நமக்கேன் வீண் சிரமம் எனும் விட்டேர்த்தியான போக்குதான் புலப்பட்டது. நான் ஸ்ரீராமஜெயம் எழுதி அவர் தாய் பிழைத்துவிடுவாரோ எனப்பயந்த அவரின் செய்கை அன்று ஆத்திரத்தை வரவழைத்தாலும் இன்று நினைக்கையில் வருத்தம் தோய்ந்த சிரிப்புத்தான் வருகிறது. நல்ல பிள்ளை ! இவரைப் பெற்று வள‌ர்த்ததற்கு ப‌தில் பாட்டி நாலு மாடுகளை வாங்கி வள‌ர்த்திருக்கலாம். இறுதி நாளில் ஊற்ற பாலாவது கிடைத்திருக்கும்..!

என்னென்னவோ செய்தனர், பூஜை பரிகாரம் என்று, எல்லாம் வரவேற்க அல்ல! வழியனுப்ப மட்டும்தான். பாட்டியும் எவ்வளவுதான் பொறுப்பார். ஒரு மழை நாள் மாலையில் அவர் மண் விட்டு மறைந்தார்.

பாட்டியைப் பிரிந்த வேதனையில் அழுதழுது காய்ச்சல் வந்துவிட்டது,  அதிகம் அன்பாய் பேசாத அப்பா அப்போது ஆறுதலாய் ஒன்று சொன்னார்  "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தே" என்று. அப்பா உண்மைதான் சொன்னார்,  மனம்தான் ஏற்க மறுக்கிறது..!

இன்றும் காத்திருக்கிறேன், மீண்டும் பாட்டியின் கைபற்றிக் கொன்டு 5 வயது சிறுமியாய் அங்காடி வீதி நோக்கி நடக்க‌..! என்றாவது வருவார், ஆம் நிச்சயம் வருவார், என் கையை த‌ன் கைக்குள் சேமித்துக்கொண்டு நடக்க....!       


  

Monday, June 22, 2009

எண்ணும் எழுத்தும்



அண்மையில் அஞ்சலில் வந்த அற்புதம் இது! எண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள். சில வித்தியாசமாக, சில ச‌ராசரி உபயோக வார்த்தைகளாக, நீங்களும் படித்து ரசித்து பாருங்களேன்!


1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்து நூராயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகற்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கனம் -hundred billion

1000000000000 = கர்பம் -one trillion

10000000000000 = நிகர்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அந்நியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -??????

1000000000000000000 0 = பரார்த்தம் --anybody know?

1000000000000000000 00 = பூரியம் -<>?#%^&

1000000000000000000 000 = முக்கோடி -&^*^%^#

1000000000000000000 0000 = மகாயுகம் -???????????? ????

அடடா, என்னே எம் தமிழின் அருமை என பெருமைகொள்ளத்தோன்றுகிறது அல்லவா?

"தாயே த‌மிழே உனை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை, வ‌ண‌ங்கித்தாள் ப‌ணிகிறேன்"