.

.
.
Showing posts with label தமிழ்மொழி. Show all posts
Showing posts with label தமிழ்மொழி. Show all posts

Thursday, April 10, 2014

தமிழ்மொழிக்கல்வியின் அவசியம்

"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன் 
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..! 

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?    
  
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். 
"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன்
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..!

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?  
   
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். எனவே இந்தியப் பெற்றோர்கள் கல்வியோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை மிகுந்த நமது பாரம்பரியம் ஆகியவற்றை முறையே கற்றுத்தேற வழிவகுக்கும் தமிழ்க்கல்வியை அவசியம் தங்களது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

200 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வியினை வெற்றிகரமாய் வரவேற்கும் நாம் , இம்மண்ணில் தமிழ்மொழிக்கல்வி மேன்மேலும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, வாழையடி வாழையாய் தழைக்க நமது இளவல்களை தமிழ்ப்பள்ளிகளில் இணைப்போம், தமிழ்மொழிக்கல்வியின் வாயிலாய் அவர்களை சிறந்த மாந்தர்களாய் வார்த்தெடுப்போம், வாழ்க தமிழ், வள‌ர்க தமிழ்க்கல்வி

ஆக்கம்

சிவ.ஈஸ்வரி
பினாங்கு

   
      

Monday, April 7, 2014

 கடுப்படிக்கும் விளம்பரங்களும், கவலைப்படும் தமிழ் நெஞ்சங்களும்...!



நம் நாட்டில் மிகப்பெரிய மூவினங்களாக அங்கீகரிக்கப்பட்டவை மலாயர், சீனர் மற்றும் இந்தியர்கள், (வெளி நாட்டுக்குடியேறிகள் தற்சமயம் அதிகரித்து வருவது வேறு ஒரு தலைவலி..!) இந்நாட்டில் திராவிட இனங்களான‌ தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்களோடு சீக்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர், எனினும் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தமிழ் மொழி இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மூன்றாவது மொழியாக ஆங்கிலம், மலாய்க்கு அடுத்து இந்தியர்களுக்கு தமிழும், சீனர்களுக்கு மான்டரீன் மொழியும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒற்றுமையில் சிறந்தவர்கள் சீனர்கள் என்பது வெள்ளிடைமலை, தங்கள் பெயர்களிலேயே தங்களை பிரிவுபடுத்தும் சாதிப்பிரிவுகள் பல இருந்தாலும், த‌ங்கள் இனத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் மான்டரீன் மொழியை தங்கள் பிரதிநிதித்துவ மொழியாக உள‌மாற ஏற்று இந்நாட்டில் உருப்படியாய் வாழ்ந்து வருகிறார்கள், தங்களை பிரதிநிதிக்கும் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் ஏற்படுத்திக்கொன்டு !  இன்று சீன மொழியை யாராவது சிறுமைபடுத்திப் பார்க்க முடியுமா ? அப்படிச் செய்ய முனைந்த அரசியல்வாதிகளின் மூக்கை அவர்கள் எப்படி உடைப்பார்கள் என்பதை அரசியல் அறிந்தோர் நிச்சயம் அறிந்திருப்பர், ஆனால் இந்தியர்கள் ? 

தற்கால சூழலில் ம்லேசிய இந்தியரிடையே பல பிரிவுகள், ஆயிரத்தெட்டு அரசியல் கட்சிகள், சாதிச்சங்கங்கள் இவை தனிமனிதனுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆற்றிடும் நன்மைகள் என்ன என்பதை எல்லோரும் சிந்தித்துச் சீர்தூக்கிப்பார்க்க‌ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ! எனும் உண்மை தற்காலத்தில் மறக்கப்பட்டு வருவது கண்கூடு. சுயநலம், சுயலாபம் மட்டுமே பிரதானம் என இயங்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம். பொருளாதாரத்தில் உயர்ந்தோர் மேல்நாட்டு ஆங்கிலேயர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முயல்வது மறுபுறம்..!

நேற்று வடக்கு நெடுஞ்சாலையில் (பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லும் வழியில்) பயணித்துக் கொன்டிருக்கையில் ஒரு காட்சி, அது ஒரு ரொட்டி(பிஸ்கோத்து) விளம்பரம், பெரிய காட்சிப்பேழையாக‌ (பேனராக) வைக்கப்பட்டிருதது, அதிலே நம் நாட்டின் மூவினப் பெண்களும் அந்த பிஸ்கோத்தை உண்டுவிட்டு தங்கள் கருத்தை ஒரு வார்த்தையில் சொல்கிறார்களாம், மலாய் பெண்மணி மலாயில் ஒரு வார்த்தை, சீனப்பெண்மணி மாண்டரீன் மொழியில் ஒரு வார்த்தை, அடுத்து சேலையணிந்த ஒரு பெண்மணி ஒரு வார்த்தை சொல்கிறார் அது என்னவென்றே புரியவில்லை, காரணம் அந்த எழுத்து இந்திமொழியில் இருக்கிறது !!!.

பார்த்தீர்களா தமிழுக்கு நேர்ந்த தலைகுனிவை ?, இது மட்டுமல்ல, இப்போது பல தொலைக்காட்சி விள‌ம்பரங்களிலும் பல வகைகளில் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி இந்தியர்களில் ஒரு பிரிவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், பொருளாதரத்திலும், கல்வி நிலையிலும் மேம்பட்டு உள்ள சீக்கியர்களை மட்டுமே இந்தியர்களாக அடையாளம் காட்டும் முயற்சி தற்பொழுது பரவலாக இங்கே சிலரால்  மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் காணக்கிடைக்கும் காட்சிகளே.ஏனென்று கேட்க பாவம் இந்த அநாதைச் சமுதாயத்திற்கு ஆளில்லை...! 

ஏன் இந்த நிலை ? என்ன செய்து கொன்டிருக்கின்றார்கள் நம் பிரதிநிதிகள் ? இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு வேறென்ன வேலை ? ஓட்டுப்போட மட்டும்தான் நாமா ? நமக்கென ஒரு பிரச்சனையென்றால் இவர்கள் யாரும் கேட்க மாட்டார்களா ?

தமிழுக்கு முக்கியத்துவம் கோரப்பட‌ வேண்டும், சிங்கையில் அமைந்துள்ளதைப்போல அரசியல்ரீதியில் தமிழ் இங்கே இந்தியர்களுக்கு கட்டாய மொழியாக்கப்பட வேண்டும், மேற்கல்விகளுக்கும் தமிழ் அவசியமாக்கப்படவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சார்ந்த மேன்மைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தமிழறிந்தவர்களாக, தமிழை வாழவைப்பவர்களாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் ! இனிவரும் காலங்களில் இவற்றை செய்வோமா நாம் ?

Friday, August 2, 2013

வேற்றுமொழிப்பள்ளிகளும், இந்தியப் பெற்றோர்களின் மனோநிலையும்...!




அண்மையில் நாட்டில் நடைபெற்ற‌ ஒரு சம்பவம் இந்நாட்டின் ஒட்டுமொத்த இந்தியர்களையும் புண்படுத்தியதோடு ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது. எஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா  எனும்  தேசிய மொழிப்பள்ளியில்  இந்திய மற்றும் சீன மாணவர்களை கழிவறை அருகே (உடை மாற்றும் இடமாம்!?) உணவருந்தச் செய்த கொடுமை சம்பந்தப்பட்ட ப‌ள்ளி ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது! இக்குற்றச்செயலை புரிந்தவர்களுக்கு சரியான தண்டனை கோரி போராட்டத்தில் பொதுமக்கள்! வழக்கம்போல் பேசாமடந்தைகளாய் அரசியல்வாதிகள்!.

 அது ஒரு தேசிய மொழி ஆரம்பப்பள்ளி, அதில் பயிலும் மாணவர்கள் 7 லிருந்து 12 வய‌துக்குட்பட்ட சிறுவர்கள். சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பற்றவர்கள் சிறுவர்கள், அவர்கள் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொற்படி நடக்கவேண்டியவர்கள். அவர்களை சரியான முறையில் பெற்றோரும், ஆசிரியர்களும் வழிந‌டத்துவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல! . நாம் அனைவரும் அடங்கிய இந்த சமுதாயம், நம்மை ஆளும் இந்நாட்டின் அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ண‌யிப்பவர்கள். வருங்காலத்தில் அவர்கள் நல்ல முறையில் முன்னேறி இந்நாட்டை வளமான பாதையில் வழி நடத்தவும் முடியும், குற்றவாளிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாறி இதே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவும் முடியும்...! இந்தச் சிறுவர்களுக்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். அதற்கு அவர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இச்சம்பவம் பற்றி யோசிக்கையில் சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வேற்றுமொழிப் பள்ளி ஒன்றில் பயின்ற ஓர் இந்திய மாணவனுக்கு நிகழ்ந்த கொடுமை நினைவுக்கு வந்தது. வெளியில் வராத செய்தி இது.

அது ஒரு இந்தியர்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதி அங்கே பல குடும்பங்களோடு காவேரி அக்காவும் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் கணவர் ஒரு ராணுவ அதிகாரி, சரவாக்கில் பணியாற்றிக்கொன்டிருந்தார். வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள், மூத்தவனுக்கு 8 வயது, இளையவனுக்கு 7 வயது.

காவேரி அக்கா, குள்ளமாக, சற்று தடித்த தோற்றத்துடன் முன்பற்கள் இரண்டும் சற்று தூக்கியவாறு இருப்பார், பழகுவதற்கு இனியவர். அவரின் மூத்த மகன் நல்ல கொழு கொழுவென்று தாட்டிகமாக வீரனைப்போல் இருப்பான், ஆனால் இளையவனோ மிகவும் சிறிய உருவத்துடனும், பரிதாப முகத்துடனும் காட்சியளிப்பான். அவனுக்கு சரியாக பேசக்கூட வராது. திக்கி திக்கித்தான் ஓரிரு வார்த்தைகள் பேசுவான், பயந்த‌ கண்கள், இதழ் ஓரங்களில் எப்போழுதும் எச்சில் வழிந்து கொன்டிருக்கும்.. அந்த இரு குழந்தைகளையும் காவேரி அக்கா அவர் கணவர் விருப்பப்படி சற்று தொலைவிலிருந்த சீனப்பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டிருந்தார். மூத்தவன் அப்போது இரண்டாம் ஆண்டில் பயில, இளையவன் முதலாம் வகுப்பில்.

ஒரு நாள் அப்பள்ளியில் பயிலும் சில துக்ஷ்ட சீன‌மாணவர்கள் மூத்தவனுக்குத் தெரியாமல் அவன் தம்பியை அப்பள்ளியின் ஒதுக்குப்புற‌மான இடத்துக்கு அழைத்துச் சென்று அவனிடமிருந்த பண‌த்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.  மறைவான‌ பகுதியாதலால் அச்சிறுவனின் அவலக்குரல் யாருக்கும் எட்டவில்லை, அவனை சரமாரியாக  தாக்கிய பின் அந்த தீயவர்கள் அந்த அப்பாவி சிறுவனை அருகிலிருந்த பள்ளியின் சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு விட்டு ஒன்றும் நடவாதது போல் அவரவர் வகுப்புக்கு சென்றுவிட்டனர்.

அந்த கால்வாய் அகலமானது, ஒரு வளர்ந்த மனிதரின் இடுப்பள‌வு ஆழம் கொன்டது, எப்போதும் அதில் கொஞ்சம் கருமையான அழுக்கு நீர் தேங்கி இருக்கும், அந்த கால்வாயில் விழுந்த அந்த சிறுவனின் இடது கை முறிந்து போனது, தலையின் முன்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்வாயில் சுருண்டு விழுந்து கிடந்தான் அச்சிறுவன், அவன் நல்ல‌ நேரம், அப்போது அவ்வழியாக அந்த கால்வாயை சுத்தம் செய்ய வந்த அப்பள்ளியின் தோட்டக்காரர் (இந்தியர்) கால்வாயில் அழுதவாறே கிடந்த சிறுவனைக் கண்டு பதறிப்போய், உடனே கால்வாயில் இறங்கி அவனை தூக்கிக்கொன்டு வெளியே வந்தார்.

உடல் முழுக்க காயங்களோடு, முகம் வீங்கி, உதடு கிழிந்து கிடந்த அச்சிறுவனை அழுக்கு, நாற்றம் எதையும் பாராது, நெஞ்சோடு அள்ளி அணைத்துக்கொன்டு தலைமை ஆசிரியர் அறைக்கு கொன்டு சென்றார், அங்கே அப்பள்ளியின் தலைமை ஆசிரியன், அக்குழந்தை உயிரோடு இருப்பதை உறுதி செய்து விட்டு, "இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளி முடிந்துவிடும் பெற்றோர் வந்து கவனித்துக்கொள்வார்கள் எனவே அதுவரை அவனை அவனுடைய வகுப்பறையில் விட்டுவிடு எனப் பணித்திருக்கிறான்..! (ஒரு வேளை தன் சொந்த இனமான சீனக்குழந்தையாயிருந்தால் அவன் அப்படியொரு முடிவை எடுத்திருப்பானா என்பது தெரியவில்லை ! ) தோட்டக்காரர்  திகைத்துப்போனார், மீண்டும் குழந்தையை தூக்கிக்கொன்டு அவனுடைய முதலாம் வகுப்பறையை தேடிக்கொன்டு ஓடினார், அவனின் வகுப்பாசிரியை எலலோருக்கும் மேல்! அவள் அச்சிறுவனின் மேலுள்ள சாக்கடை அழுக்கால் வகுப்பறை நாறிவிடும் எனக்கூறி அவனை பள்ளி விடும்வரை பள்ளி உணவுச்சாலை (காண்டீனில்) விட்டுவிடும்படி கூறியிருக்கிறாள், யாருக்கும் அவனுக்கு உதவவேண்டும் , முதலுதவிச்சிகிச்சை வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை, என்ன காருண்ய மனமோ புரியவில்லை! சே என்றாகிப்போனது தோட்டக்காரருக்கு, இருந்தும் அச்சிறுவனை தூக்கிக்கொன்டு உண‌வுச்சாலைக்கு கொன்டு சென்றார், அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தி தனது துவாலையால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை துடைத்துவிட்டார். அவன் காயங்களிலிருந்து நிற்காமல் வழிந்து கொன்டிருந்த இரத்தத்தை சுத்தம் செய்தார். பள்ளி விடும் வரை பொறுமையோடு அவன் அருகில் அமர்ந்து அவனை பாதுகாத்தார் அந்த நல்லவர்..!

பள்ளி விட்டதும், அவன் அண்ணன் வெளியில் வந்து தன் சகோதரனின் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய்  நின்றான். அவர்களை அழைத்துச்செல்ல வந்த காவேரி அக்கா தனது மகனின் நிலையைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக அவன் வகுப்பாசிரியரை சென்று கண்டார், அவர் படிப்பறிவற்றவர், தமக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தைகளைக்கொன்டு "அப்பா பசாய்"? (என்ன நடந்தது) ? என்று வினவ, கொஞ்சமும் அக்கறையில்லாமல் "தத்தாவ்" (தெரியாது) எனக்கூறி கதையை முடித்துவிட்டாள் அந்த பொறுப்பற்ற வகுப்பாசிரியை...! காவேரி அக்காவுக்கு என்ன நடந்ததென்று புரியவில்லை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், கீழே விழுந்து விட்டான் எனக்கூறி உடைந்திருந்த மண்டை காயத்திற்கு தையலும், முறிந்த‌ கைக்கு கட்டும் போடப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டான் அச்சிறுவன். சட்டம் தெரியாத, உலக நிலவரங்கள் புரியாத காவேரி அக்கா அமைதி காத்து விட்டார், அதே இன்று போலிருந்தால், முகநூல், ஊடகங்கள், நாழிதழ்கள், காவல்துறை புகார் என சரியான பதிலடி அந்தப் பள்ளிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்த காவேரி அக்கா நடந்த சம்பவத்தை பற்றி கூறினார், அதை கேட்க மிகவும் வேதனையாக இருந்தது, அதோடு அப்பிரச்சனையை விட்டு விட்டீர்களா அக்கா ? என  பொறுமையிழந்து நான் கேட்க, காவேரி அக்கா , இல்லை உடனே சின்னவனை( தனது இளைய மகனை அவர் அப்படித்தான் செல்லமாக அழைப்பார்) அந்த சீன பள்ளியிலிருந்து நிப்பாட்டி தமிழ்ப்பள்ளியிலே சேர்த்துட்டேன் என்றார், " ஓ அப்ப  ரெண்டு பேரும் இப்ப தமிழ்ப்பள்ளியில படிக்கிறாங்களா அக்கா ?  என ஆர்வத்துடன் கேட்க அவர் கொடுத்தார் பாருங்கள் ஒரு பதில்! என்னை திக்கு முக்காடச் செய்து விட்டது அவர் சிந்தனை !

"இல்லை, இல்லை பெரியவன் அதே சீன ஸ்கூல்லயே தான் படிக்கிறான்...! என்ன இருந்தாலும் சீனப்பள்ளியில் படிச்சா சீனங்களோடு கலந்து சீக்கிரமா முன்னுக்கு வரலாம் இல்லையா ?"
நான் வாயடைத்துப்போனேன், என்னே ஒரு தன்மானம்! சுயகெளரவம்!
வீரம்! விவேகம்! நமக்கு...!!!!
  

             
   
சிவனேசு,
பினாங்கு